Monday, January 18, 2010



அறைக்கு வந்த வண்ணாத்தி

இள வயதுப் பழக்கம் உனைக்கண்டேன்
வயது சுருங்கி
ஆறு வயதில் நான் இப்போ
அழைத்துச் செல்லவா எனைத் தேடி நீ வந்தாய்
எண்பதில் நாம் வாழ்ந்த காடு எங்கிலும் வீடு
உன் பிறப்பும் இருப்பும் தவரைப் பற்றை
அல்லது அது விருட்சம்
உங்களின் உலகம்
பூக்களில் பூவாய் பூத்திருப்பாய்
நான் கிள்ளிப் பிடிக்க நீ பறப்பாய்
கிளை முறித்து உன்னை அடிப்பேன்
வாலிலே நூல் முடிந்து பறக்க வைப்பேன்
ஈர மண்ணில் கூடு கட்டி
அடைத்து வைப்பேன் ஐயோ
நீ காந்திய வாரிசு
அகிம்சையின் அமைவிடம்
வெஞ்சினம் உனக்கு இல்லை திருப்பித் தாக்க
குத்தித் தாக்க கொடுக்குமில்லை
நீ கார்த்திகையில் புழுவானாய்
மார்கழியில் பூவானாய் எப்படி
பின்
பக்தி முத்தி வர்ணம் கலைத்து வேள்ளையானாய்
ஒரு நாள் ஒன்றுகூடி
ஊர் வலமாய் பறந்தீரே
வண்ணாத்தி வண்ணாத்தி
நானும் குந்த இடம் தாயேன் உன் முதுகில்
ஹஜ்ஜா, உம்ராவா
கதிர்காம யாத்திரையா
வண்ணாத்தி வண்ணாத்தி
மீண்டும் மீண்டும் வந்து போயேன் என்னறைக்கு
பால்ய காலப் பசுமையை
என்னிடம் பகிர்ந்து செல்லேன்


No comments:

Post a Comment