பட்ட மரத்தில் ஊரும் கடியான்கள் அதனைப் பிரிந்த உயிர்
Friday, March 5, 2010
பிறழ்வு
துப்பாக்கிமனிதர்களின் காலடிஓசைக்குநாய்கள்குரைத்த ஒரு இருண்மை இரவின் பின்தான் ஊமையாகிப் போனான் வானம் முட்ட உரிமையைப் பறைந்த அவன்
இன்னுமொரு தேசியகீதம்
கொத்துண்டு
குருதி சிந்தி
காக்கை கூண்டில்
குயில்க் குஞ்சாய் நாம் வளர்ந்தோம்
செடியில் விடுவித்து
ஆடி அசைந்துவிழும்
மலர் போல
எம் விடுதலையை வடிவமைப்போம்
விழுந்தாலும்
வேரூன்றி
விருட்சமாய் உயிர்த்தெழுவோம்
augest2005
இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை
ஊர்தூங்கும் கருஇரவின்பிற்பாதிக் குளிரிலும் மனவெம்மை அயலெல்லாம்துப்பாக்கியேந்திப் பிரசன்னம் குருதிப்புனலெலாம்கிளிகவிந்து திருடனின்அந்தப்புரத்தில் தனித்துத்தவித்திட்டஜீவிதம் நத்தைகள்ஊரும்அகநிலத்தில் எதைவிதைப்பேன் குஞ்சுபொரித்துப் பறக்கா இருக்குக் கதிரிலிட்ட மழை முட்டை நாக பாம்பாட்டம் கொத்திக் குடிக்கும் சூரிய கிரணக் கீற்று பின் தொடரும் மரண பயக் காலமதாய் நாள் நீளும் அருகே கண்ணுறங்கும் நிலா குஞ்சின் முகம் பார்த்து ஆகாய விழி பிதுங்கி ஒரு சொட்டுச் சொட்டாதா அது வீழ்ந்தால் மனதில் சிர்ரென்று நீர் கருகும் மடித்த கையில் கண் வளரும் மனையாளின் தலை நீவி உயிர் சிலிர்ப்பி முத்தமிட உதவாத இரவாச்சு மூளைக்குள் நசிபட்டு வெட்டுக்கிளி உதைக்கும் உயிர் வெளியில் நரம்புளகி நலிவுற்ற மனதெழுப்பிக் கவிபாட முடியா போர் முனைப் படையணியாய் மண் கிழித்து வெளிப்பட்டு விரைந்த்தோடி மடியும் ஈசலதா மனித வாழ்வும்
septempar2006
ஒட்டிக் கொண்டிருக்கிறோம் நீரில்
எதேர்ச்சையாய்குனிந்தேன் நட்சத்திரச்சிதறல்களோடு நிலாவேஎன்தலைக்கு ஒளிவட்டமானஅதிசயத்தில் மகிழ்ந்தேன் கால்தடுக்கிகல்விழ நொறுங்கிச் சிதறிய நிலவும் நானும் மீளவும் ஒட்டிக் கொண்டிருக்கிறோம் அதே நீரில் .......
திடு திடுத்த மழை இரவின் காலை
தவத்தில்கண்டெடுத்தவார்த்தைகளடுக்கி ஒரு அழகுக் கலைஞன் பூமியில் இருந்தெட்டி அகலக் கால் பதித்தான் வானத்தில் பச்சை கொடிகள் சுற்றிப் படர்ந்து வானம் வரைக்கும் வளர்ந்தன பசுமை தடையின்றி இப்போது வானத்தில் பூமி தொங்கிக் கொண்டிருந்தது வானம் ஒரு பட்டம் போல் பறக்க ஆகாயம் கரைந்து பூமியில் இறங்கும் ஒரு திடு திடுத்த மழை இரவில் பூமி தரிசனம் நிகழ்ந்திருந்தது கொடிகளைப் பற்றியபடி இறங்கியிருந்தான் ஊர் செழித்திருந்தது காலையில் கண் விழித்தால் ஊர் முழுதும் அவன் காலடிகள்