Wednesday, April 28, 2010




உயிரில் ஒட்டு வைத்து

சிரித்தால் எனக்கு மோட்சம்
பார்த்தால் பாக்கியம்
தொட்டால் உயிர்ப்பு
விட்டால் மரணம்
மழையாக நனையலாம்
உன் எச்சிலிலேயே
பனித்துளியாய் பருகலாம்
உன் வியர்வைத் தூறல்களையே
எப்படி வந்தது
முற்றத்து ரோஜாக்களிலேயே
உனது முகம்
மல்லிகைகளிNயே உனது மணம்
பௌர்ணமி நிலவில் உனது நிறம்
மனப்பூ சில்லிடும்
வாயால் உதிரும் வார்த்தை கேட்டு
புத்துயிர்க்கும் அங்கமெல்லாம்
உன் விரல் பட்டு
நீ செல்கின்ற காலடிகள்
மனசுக்குள் மையித்து ஊர்வலம்
திரும்பி வருகையிலே திருமணஊர்வலம்
உன் பல்குத்தும் குச்சியாகவோ
வாய் கழுவும் நீராவோ ஆகிறேன்
தந்த முத்தக் கடனுக்காக
சமையலறைக் கையுறையாகவோ
நகம் வெட்டியாகவோ ஆகிறேன்
சுட்டுவிரல் தேனை
சுவைக்கத் தந்த கடனுக்காக
பாதத்துக்கு செருப்பாகிறேன்
உடுத்திக் கொள்ள சேலையாகிறே;ன்
ஈன்ற கடனுக்காக
உயிரில் ஒட்டு வைத்து
என் உயிரை விளைவித்தவளே
தாய்க்குத் தாயாய்
கருவறையில் உனைச்சுமக்காமல்
எப்படித் தாயே என் கடன் தீரும்?

எஸ்.நளீம்- இலங்கை




















சுமையா


டு நிசியில்
உன் கூடு கலைந்தது
உன் எதிர் வினையால்
மனசு படபடக்க
தூரத்தே உன் குரல்
தேய்ந்தழிpந்தது வெள்ளாப்பில்
உன் இறப்புக்கு சாட்சியாய்
இரத்தமும் இறகும் கிடந்தது.
எஸ்.நளீம் இலங்கை

எழுந்து நிற்கும் நீராலானவள்

பாதவேர் பற்ற மண்ணின் ஊற்றாகி
வான்நோக்கி அசைந்தோடும்
பச்சை நதி யாரம்மா
சாமரச் சுவாசம்
காற்றில்
கலக்கும் அமிர்தம்
உன் தாவணி உருவி
இரா இருட்டில்
மீன் பிடிக்கும் வெளவால்
உனக்குள் கடல் பொங்கி அழாதே
அது பாலாகி தேனாகி மதுவாகி
உனை மொய்க்கும் ஊர்ப்பறவை
வேலியிட யாருண்டு
செக்கச் சிவந்த பூ தாம்;பூல வாய்
உன்னில் மிதக்க
எழுந்து நிற்கும் நீராலானவளே
உன்னிலும் அலை எழுப்பும்
காற்று.

எஸ். நளீம், இலங்கை

உன் மகுடி நாதம்

என்னில் சொரிய உன்னில்
எப்படி உற்பத்திக்க்pறாய்
இப்படிப் பெரிதாய் அன்பை
மயங்கி உன் மகுடிக்கு முன்னால்
கைகட்டி நிற்கிறேன்
தவளைகள் தலையிலேறிக் குதிக்க
எலிகளும் எள்ளி நகைக்கின்ற கேவலம்
கரப்பான்களும் என் மீது
சிறுநீர் கழிக்கின்ற துயரம்
கழுகுகளிடமிருந்து தப்பிப்பிழைக்க
வேண்டும்தான்
அதற்காக
இந்த அற்பங்களிடம்
என்னால் தலை வணங்க முடியாது
நான் ஆனவளே
சற்று நிறுத்து உன் மகுடி நாதத்தை
நான் நல்ல பாம்பென்று
நிரூபித்து வருகிறேன்.

எஸ்.நளீம் - இலங்கை

நார் நாராய் மழைத் தூறல் ஓலை முனையில் எறும்பூர்ந்து



மங்கிய இருளில் மூழ்கி
குப்பி விளக்கின் செம்மஞ்சள் கவிகிறது.
அறைச்சுவரில் பேய்வெயில்
முகத்தில் குந்தி சிறகாட்டும்
சிறு வண்ணாத்தி
இமைகள் பார்த்தே இருக்கிறாய்
சுடு சுவாசக் காற்று
இரவுத் தென்றல் கதகதக்கும் ஸ்பரிசம்
நெற்றி முடி ஊஞ்சல்போல
நார் நாராய் மழைத் தூறல்
ஓலை முனையில் எறும்பூர்ந்து
குண்டு விழுந்து வெடித்துச் சிதறி
களிமண் தரையெல்லாம்
தொப்புள் குழிகள்
பூத்துமடியா
தழும்பும் இரு மழைக் குமிழி
கருங் கூந்தல் கலைந்து வீழ்ந்து
இடையில் நீர் அருவி
அழகையெல்லாம் மேய்ந்தலைந்து
விறைப்பேறி மனம்
வயிற்றுக் கடலோடா
இடுங்கித் தாண்ட காகிதக் கப்பல்
நீர் நிறைந்து மிதக்கக் கூடும்
எனைக் கவரும் கவிதை ஒன்றை
இன்றிரவில் நான் எழுதக்கூடும்
அது
கைபொத்திக் கால்உதைத்து
எனைப் பார்த்து சிரிக்கக்கூடும்

எஸ்.நளீம் - இலங்கை

ஓவியப் பட்சி

சொண்டு வெடித்து துடிக்கிறது
மன நீர்க்கோப்பைக்குள்
கால் நூற்றாண்டுக் கனவுலகின்
கருவுருவை
இறக்கிவைக்க முடியாதா
நிறைமாத கர்ப்பிணி நான்
பிரயத்தனம் திரட்டி
வியர்வையுடன் வர்ணம் சிந்த
பன்னீர் குடம் உடைத்து
ரத்தத்தில் கலந்த்திட்டு
தூரிகை தொட்டெடுத்து
விரல் வழியால் பிரசவிக்க
தலை நீட்டி லாவகமாய்
முக்கித்தக்கி வெளியாகி
மூச்சின்றிப் படுத்திட்டு
தொப்புள் கொடியறுத்து,
நீர் தெளித்து, முகம் துடைத்து
ஓய்வளித்தேன்
ஆகா...
உயிர்வரைந்த ஓவியமே
உயிர்கொண்டு சிலிப்பிற்று
ஒதுங்கி நின்று இரசித்திருந்தேன்
குறுகுறுத்த பார்வையாலே
எனைக் கண்டு சிரித்திட்டு
மழை வந்தால் நனையாதா
வெயில் என்றால் வியர்க்காதா
வரைபடத்தை விரித்து வைத்து
கூனியில் கயிரிழுத்து
கூடொன்று வரையலானேன்
கூடு முடியுமுன்
என் குருவி பறந்திட்டு

Tuesday, April 20, 2010


இருள் ஒதுங்கும் மூலை

அடுப்புப் பூனைபோல்
தன் உடல் சுரட்டி
உன் குடிசை மூலை பார்த்துத்தான்
இருள் ஒதுங்கும்
இத்திக்கில் உதிக்கின்ற சூரியர்கள் போய்
மேற்குக் கடலில் கவிழும் படு சுயநலமாய்
கிழக்கு மீளும்
உனக்கு மீட்சி…
அவர்கள் உனைக் கொளுத்தும்
தீ ஒளியிலேனும்
உன் சுயம் காண்
தேர்தல்கள் தோறும்
நிறம் பூசிக்கொண்ட
உன் சின்ன விரலிடம் வெட்கம் கொள்
வாக்களிக்க நீ பிரஜை
வரி செலுத்த நீ பிரஜை
இங்கே வாழமட்டும் நீயார்

எஸ்.நளீம்

அழகு தின்னிப் பறவை

விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்
இரட்டைப் பறவைகளாய்
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல
அதில் மொய்க்கும்
ஆடு போல அனைத்தையும்மேயும்
புறாக்கள்போல
நட்சத்திரங்களைப் பொறுக்கியுண்டு
நிலாமுட்டியில் பாலருந்தித் திரும்பும்
ஆடுபோல்ஓரிடத்தில்குந்தி ஓய்வாய்இரை மீட்டும்
மீண்டும் இரவு விளக்கின் மங்கிய இருளில்
ஒதுங்கிய மாராப்பில் புகுந்து
கோழியாய்
எங்கனும் சீச்சிப் பொறுக்கித் தின்று
களைப்பில் மயங்கி விழும்.
எஸ்.நளீம் இலங்கை


சூரியன் இறங்கித் தலையில் குந்தி

என் பட்டு நிலா
நானில்லா வானத்தில் காய்கிறது
இரும்பாலான மனவுலக ஜீவிதம் இது
இறுகித் திண்மமாகி
கம்பியாய் நுழைகிறது
சுவாசக் காற்று
காலம் வேகம் கொண்டுரசி தீப்பற்றி
சூரியன் இறுகித் தலையில் குந்தி
மெழுகு வர்த்தியாய் நான்

எஸ். நளீம் - இலங்கை

சவால்

திருத்தித் திருத்தி வரைந்தாலும்
முடிவதில்லை கைகளுக்கு
எதேச்சையாய்
சிதறி வீழ்ந்த மைத்துளியின் அழகை.
எஸ். நளீம் இலங்கை.

ஆயிரத்தோர் இரவில்

பனிப் பெய்த ஓர் இரவும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
வந்து விடுமா
அன்று என் கண்ணில் ஒட்டிய துயரம்.

எஸ். நளீம் - இலங்கை

தலைக்குள் அணில்

சைக்கிளில் காலூன்றி
முற்றத்தில் நின்று
பாளை வெடித்துச் சிரிக்கிறாயே
யாரும் பார்த்து விட்டால்
கை வீசித்; துரத்து
காக்கை வந்து முட்டையிட்டு
குயில் குஞ்சு பொரிக்க
நீயென்ன பொதுச்சொத்தா
எனக்கு மாமி தந்த பிள்ளை
சீவிப் பேன் நீக்கி
உச்சியில் அள்ளி முடிந்த கேசம்
காற்றுக்குக் கலைந்தாடும்
ஆனால் உன் தலைக்குள் அணில்
பூ நட
வளைத்து நட்ட கற்களே
உன் காலுக்குக் கொலுசாகி
உன் இடுப்பு மடிப்பில் நடந்து
தொப்புள் தோண்டிய வண்டை
கிள்ளியெறி
வாட்ட சாட்டமாய்
வளைந்து நெளியும்
பருவச் சிறுக்கி
வயதுக்கு வந்து
காதில் அணிந்த மணப் பந்தல்;
காற்றுக்காடி உதிர்கிறது
குரும்பட்டி பருத்த மார்பாகி
உன் கக்கத்திலிருந்து
இள நீர் திருகும் என் ஆசை
பன்னாடைக்குள் பதுக்கு
உன் பருவச் செழிப்பை
நீ பால் தரும் தாயாகி
நாங்கள் குழந்தைகளாகி
சீ……வேண்டாம்
நீ தென்னையாகவே இரு
சூச்சூ......
அதோ மட்டையில் கிளி.

எஸ்.நளீம் - இலங்கை

இலை துளிர்த்துக் குயில் கூவும்

வளர்கிறாய் நீ
உன்னில் எனை வரைந்தே
என் வெற்று மார்பில் மயிர் பிடுங்கித் தாப்புக் காட்டு
முழுதாய் எனைக் காட்டும்
நிலைக் கண்ணாடி நீதாண்டி
பிஞ்சுக் கையில் நண்டாகி நரியாகி ஊர்கையிலே
மாதுளை வெடித்துச் சுளை சிதற
கலகலப்பாய் நீ
முன்னிரட்டைப் பல் காட்டி
வெள்ளைமுயல் துள்ளி
அணில்குஞ்சு ஊர்ந்த தென்னில்
மனம் சப்பாணிக் கொட்டும்
உன்னழகை எதில் காண்பேன்
கோடான கோடி அர்ததம் பொதிந்த
கவியொழுகும் கனிவு மொழி
ஒற்றைச்சொல்லில் உம்பா சொல்வாய்
உயிரை உருக்கும் உன் மொழியில்
செல்லங் கொஞ்சும் என்னசைவால்
செழித்தோங்கும் செவ்வருத்தை
மனம் நிறையப் பூக்க வைத்தாய்
தொட்டில் வைரம்
கரைசலாய் உயிரைக் கரைத்து
உன் காலில் தெளித்திருக்கேன்
வளர்க மகளே
என்றும் இலை துளிர்த்துக் குயில் கூவும்
நமக்குள்ளே!

தவளை கத்தும் மழை

வெள்ளமாய்

பொங்கிப் பிரவாகித்து அதன்பாட்டில்
கோடையின்றிக் கொட்டும் மழை
மூழ்குவோர் மூழ்க
நீந்துவோர் நீந்த
கரைசேர்க்க யாருண்டு
முகில் குவிந்த பவ்வல்
வான்சிவந்து இடி
தவளை கத்தி மழைஓயா
நீரை ஏவி விட்ட பூமி
முகிலாய் குவித்தவானம்
யார் யார்
ஊன்றுகோலற்ற கிழவன் வானம்
தள்ளாடும் பூமிக்கிழவி தகராறா?
புரிந்துணர்வு எங்குண்டு
சீலைப்பேன் புளுத்து
உடலெல்லாம் ஊரும் அவஸ்த்தை
சிந்தனைனயில் சீழ் கட்டி
தெறிக்கும் வலி
பழம்புண் ஆறா
அனைத்துக்கும் வெயில் வேண்டும்.