Tuesday, January 19, 2010


பல்லிகள் இல்லாத சுவரில் மேயும்
வண்ணத்துப் பூச்சிகள்


வெளியில் முகம்
காட்டி
செடிகள் படர்ந்தன
பச்சிலைப் பாம்பின் உயிர்ப்புடன்
காற்றிறுகிய சதுர அறைக்குள் என்ன இருந்தன
அந்த கதவு ஜன்னலின் துவார வழியால்
கனிவு கசிந்தது
இப்போ
வெளிச் சுவர்களெல்லாம்
கொடிகளை விளைத்தது
கொடிகளெல்லாம் பூக்களை விதைத்தது
பூக்களெல்லாம்
வண்ணத்துப் பூச்சிகளைப் பூத்தது
பல்லிகள் இல்லாத சுவரில் மோதி மோதி
மலர்களைப் புணர்ந்து காற்று மணந்தது
தட்டத் தட்டத் திறக்காத அறை திறந்தது
உள்ளே
பேனா ஊன்றிய தாளுடன்
ஒரு கவிதை இருந்தது
நம் சுதந்திரத்தைப் பாடியபடி
(2009)

No comments:

Post a Comment