Saturday, August 17, 2013

( நேத்ரா தொலைக்காட்சி யில் கடந்த 22.07.2013 அன்று இப்தார் நிகழ்ச்சியின்போது இடம்பெற்ற எனது கவிதை )

ரமழான் எனும் மருத்துவம்


பனியில் குளித்து
காற்றில் உலர்த்தும்
ரோஜாவாய்
சடசடக்கும் மனதுடன்
கவிதைக்கு காதீந்து
பார்த்திருக்கும்
நேத்ரா நேயர்கள் அனைவருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும் !

ரமழானை ஈன்றளித்து
அதன் இறுதி நாளில்
மகிழ்வளித்து
மறைந்திருக்கும்
இறைவனுக்கே எல்லாப் புகழும்
அல் ஹம்துலில்லாஹ்

குரான் ஓதல் ,
இறைவனை தொழுதல் ,
பசித்திருத்தல்
மூன்றும் நோன்பின்
முக்கிய முகங்கள் !
முக்கிய அமல்கள் !

வைத்தியம்: வார்த்தைகளாக வந்தது
அது குரான் !
வைத்தியம்: தேகப்பியாசமாக வந்தது
அது தொழுகை !
வைத்தியம்:வயிற்றுககாய் வந்தது
அது நோன்பு !
வைத்தியம் கவிதையாகிறது .

வானம் : இறை மருத்துவன் எழுதித்தந்த
மருந்துச் சீட்டு !
அதனால்தான் வானத்தை பார்த்தே
நோன்பு தொடங்குது,முடியுது!

நிலவைத் தேதித்தாளாக தெரிந்த
நமக்குத் தெரிவதில்லை
நிலா மேகக் கடதாசியில் மடிக்கப்பட்ட
மாத்திரைஎன்று !

உலகின் நோய் தீர்க்க
வருடத்துக்கு பனிரெண்டு மாத்திரைகள்
மனிதின் பிணி தீர்க்க
வருடத்துக்கொரு வில்லைதான் !

சக்காத்:மனிதனின் மருத்துவச் செலவீனம்
வயிறு
பிணிகளின் முகாம் என்பதனால்தான்
வைத்தியம் வயித்திளிருதே தொடங்குது!

ஈவு,இரக்கமற்றது வயிறு
பசியால் எத்தனைபேரை
கள்வனாக்கியிருக்கிறது
எத்தனைபேரை
கொலைகாரனாக்கியிருக்கிறது
எத்தனை பேரை அனாவசியமாய்
சிறைச் சாலை அனுப்பியிருக்கிறது !

காலா காலமாக
மனிதன் அதிகம் தோற்றது
அவனது வயிற்றிடம்தான் !
அந்த வயிறு தோற்றதே நோன்பிடம்தான் !

நோன்பு ஏழைகளின்
பிரதான மருந்து
சுமையான நோய்களுக்கு
சுகமான மருந்து !

ஆங்கில மருத்துவம் அறிய இந்த
நோன்பு மருத்துவத்தில்
ஆயிரம் இருக்கிறது !

சுகாதார அமைச்சோடு
கோபம் எனக்கு !
நோய்களுக்கு எதிராய்
குப்பை கூளங்களை அகற்றச்செயும் நீர்
தொன்றுதொட்டு தேங்கிக்கிடக்கும்
வயிறுகளையும்
சுத்தி கரிக்கச் செய்யாததட்காய் !

மருத்துவர்களோடும்
மனவருத்தம்
வேளைக்கு மாத்திரையைப்
பரிந்துரைக்கும் நீர்
நோன்பையும்
மருந்தாகச் சொல்லாததட்காய் !

நோன்பு இறை மருத்துவன் கைக்
கத்தரிக்கோல் !
அதுதான்
மனிதனை பாவ சவ்வுகளை
சத்திர சிகிச்சையால் அகற்றி விடுகிறது
நோன்பு
வெட்டாமல் குத்தாமல் செய்யும்
லேசர் கதிர் மருத்துவமும்தான் !
பணத்தால் விளையும்
தலைக்கனக் கட்டிகளை
உள்ளுக்குள் வைத்தே
உடைத்து விடுகிறது !

சக்காத் :
மனோ தத்துவ வைத்தியம்
தானம் உயிர் காக்கும்
என்ற நம்பிக்கையில்
நம்பிக்கைவைத்த வைத்தியம் !

பிந்திய பத்தில்
லைலதுல் கதிர் வருவது ஏன் தெரியுமா ?
வழங்கப் பட்ட வைத்தியத்தின்
விளைவை அறியத்தான் !
'லைலதுல் கத்ர்'
இறை வைத்தியன் நோயாளியை
பக்கத்தில் அழைத்துப் பரிசோதிக்கும் நாள் !

இப்படியாக
ஒரு நோய் எதிர்ப்பு மாதத்தையே
மார்க்கத்தின் அங்கமாக்கியது
இஸ்லாம்தான் !

No comments:

Post a Comment