
எழுந்து நிற்கும் நீராலானவள்
பாதவேர் பற்ற மண்ணின் ஊற்றாகி
வான்நோக்கி அசைந்தோடும்
பச்சை நதி யாரம்மா
சாமரச் சுவாசம்
காற்றில்
கலக்கும் அமிர்தம்
உன் தாவணி உருவி
இரா இருட்டில்
மீன் பிடிக்கும் வெளவால்
உனக்குள் கடல் பொங்கி அழாதே
அது பாலாகி தேனாகி மதுவாகி
உனை மொய்க்கும் ஊர்ப்பறவை
வேலியிட யாருண்டு
செக்கச் சிவந்த பூ தாம்;பூல வாய்
உன்னில் மிதக்க
எழுந்து நிற்கும் நீராலானவளே
உன்னிலும் அலை எழுப்பும்
காற்று.
எஸ். நளீம், இலங்கை
No comments:
Post a Comment