Wednesday, April 28, 2010


எழுந்து நிற்கும் நீராலானவள்

பாதவேர் பற்ற மண்ணின் ஊற்றாகி
வான்நோக்கி அசைந்தோடும்
பச்சை நதி யாரம்மா
சாமரச் சுவாசம்
காற்றில்
கலக்கும் அமிர்தம்
உன் தாவணி உருவி
இரா இருட்டில்
மீன் பிடிக்கும் வெளவால்
உனக்குள் கடல் பொங்கி அழாதே
அது பாலாகி தேனாகி மதுவாகி
உனை மொய்க்கும் ஊர்ப்பறவை
வேலியிட யாருண்டு
செக்கச் சிவந்த பூ தாம்;பூல வாய்
உன்னில் மிதக்க
எழுந்து நிற்கும் நீராலானவளே
உன்னிலும் அலை எழுப்பும்
காற்று.

எஸ். நளீம், இலங்கை

No comments:

Post a Comment