
ஆயிரத்தோர் இரவில்
பனிப் பெய்த ஓர் இரவும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
வந்து விடுமா
அன்று என் கண்ணில் ஒட்டிய துயரம்.
எஸ். நளீம் - இலங்கை
No comments:
Post a Comment