Tuesday, April 20, 2010


ஆயிரத்தோர் இரவில்

பனிப் பெய்த ஓர் இரவும்
அதிகாலைக் குளிர்ப் புல்லும்
சாட்சி சொல்லும்
வாயிருந்தால்
பார்வையில் தீப்பற்றி
இதயத்தைக் கருக்கிய
ஆயிரத்தோர் இரவில்
உன்னையும் இழந்திருந்தேன்
உள்ளுக்குள்
எங்கிலும் புகைகிறது துக்கம்
பிதுக்கி இழுக்க நார்போல
வந்து விடுமா
அன்று என் கண்ணில் ஒட்டிய துயரம்.

எஸ். நளீம் - இலங்கை

No comments:

Post a Comment