Wednesday, April 28, 2010


உன் மகுடி நாதம்

என்னில் சொரிய உன்னில்
எப்படி உற்பத்திக்க்pறாய்
இப்படிப் பெரிதாய் அன்பை
மயங்கி உன் மகுடிக்கு முன்னால்
கைகட்டி நிற்கிறேன்
தவளைகள் தலையிலேறிக் குதிக்க
எலிகளும் எள்ளி நகைக்கின்ற கேவலம்
கரப்பான்களும் என் மீது
சிறுநீர் கழிக்கின்ற துயரம்
கழுகுகளிடமிருந்து தப்பிப்பிழைக்க
வேண்டும்தான்
அதற்காக
இந்த அற்பங்களிடம்
என்னால் தலை வணங்க முடியாது
நான் ஆனவளே
சற்று நிறுத்து உன் மகுடி நாதத்தை
நான் நல்ல பாம்பென்று
நிரூபித்து வருகிறேன்.

எஸ்.நளீம் - இலங்கை

No comments:

Post a Comment