
உன் மகுடி நாதம்
என்னில் சொரிய உன்னில்
எப்படி உற்பத்திக்க்pறாய்
இப்படிப் பெரிதாய் அன்பை
மயங்கி உன் மகுடிக்கு முன்னால்
கைகட்டி நிற்கிறேன்
தவளைகள் தலையிலேறிக் குதிக்க
எலிகளும் எள்ளி நகைக்கின்ற கேவலம்
கரப்பான்களும் என் மீது
சிறுநீர் கழிக்கின்ற துயரம்
கழுகுகளிடமிருந்து தப்பிப்பிழைக்க
வேண்டும்தான்
அதற்காக
இந்த அற்பங்களிடம்
என்னால் தலை வணங்க முடியாது
நான் ஆனவளே
சற்று நிறுத்து உன் மகுடி நாதத்தை
நான் நல்ல பாம்பென்று
நிரூபித்து வருகிறேன்.
எஸ்.நளீம் - இலங்கை
No comments:
Post a Comment