Wednesday, April 28, 2010
உயிரில் ஒட்டு வைத்து
சிரித்தால் எனக்கு மோட்சம்
பார்த்தால் பாக்கியம்
தொட்டால் உயிர்ப்பு
விட்டால் மரணம்
மழையாக நனையலாம்
உன் எச்சிலிலேயே
பனித்துளியாய் பருகலாம்
உன் வியர்வைத் தூறல்களையே
எப்படி வந்தது
முற்றத்து ரோஜாக்களிலேயே
உனது முகம்
மல்லிகைகளிNயே உனது மணம்
பௌர்ணமி நிலவில் உனது நிறம்
மனப்பூ சில்லிடும்
வாயால் உதிரும் வார்த்தை கேட்டு
புத்துயிர்க்கும் அங்கமெல்லாம்
உன் விரல் பட்டு
நீ செல்கின்ற காலடிகள்
மனசுக்குள் மையித்து ஊர்வலம்
திரும்பி வருகையிலே திருமணஊர்வலம்
உன் பல்குத்தும் குச்சியாகவோ
வாய் கழுவும் நீராவோ ஆகிறேன்
தந்த முத்தக் கடனுக்காக
சமையலறைக் கையுறையாகவோ
நகம் வெட்டியாகவோ ஆகிறேன்
சுட்டுவிரல் தேனை
சுவைக்கத் தந்த கடனுக்காக
பாதத்துக்கு செருப்பாகிறேன்
உடுத்திக் கொள்ள சேலையாகிறே;ன்
ஈன்ற கடனுக்காக
உயிரில் ஒட்டு வைத்து
என் உயிரை விளைவித்தவளே
தாய்க்குத் தாயாய்
கருவறையில் உனைச்சுமக்காமல்
எப்படித் தாயே என் கடன் தீரும்?
எஸ்.நளீம்- இலங்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment