Tuesday, April 20, 2010


அழகு தின்னிப் பறவை

விழி இரண்டும் சிறகடித்துப் பறக்கும்
இரட்டைப் பறவைகளாய்
அழகைக் கண்டதும் பொன்னி வண்டுபோல
அதில் மொய்க்கும்
ஆடு போல அனைத்தையும்மேயும்
புறாக்கள்போல
நட்சத்திரங்களைப் பொறுக்கியுண்டு
நிலாமுட்டியில் பாலருந்தித் திரும்பும்
ஆடுபோல்ஓரிடத்தில்குந்தி ஓய்வாய்இரை மீட்டும்
மீண்டும் இரவு விளக்கின் மங்கிய இருளில்
ஒதுங்கிய மாராப்பில் புகுந்து
கோழியாய்
எங்கனும் சீச்சிப் பொறுக்கித் தின்று
களைப்பில் மயங்கி விழும்.
எஸ்.நளீம் இலங்கை

No comments:

Post a Comment