Tuesday, April 20, 2010


தவளை கத்தும் மழை

வெள்ளமாய்

பொங்கிப் பிரவாகித்து அதன்பாட்டில்
கோடையின்றிக் கொட்டும் மழை
மூழ்குவோர் மூழ்க
நீந்துவோர் நீந்த
கரைசேர்க்க யாருண்டு
முகில் குவிந்த பவ்வல்
வான்சிவந்து இடி
தவளை கத்தி மழைஓயா
நீரை ஏவி விட்ட பூமி
முகிலாய் குவித்தவானம்
யார் யார்
ஊன்றுகோலற்ற கிழவன் வானம்
தள்ளாடும் பூமிக்கிழவி தகராறா?
புரிந்துணர்வு எங்குண்டு
சீலைப்பேன் புளுத்து
உடலெல்லாம் ஊரும் அவஸ்த்தை
சிந்தனைனயில் சீழ் கட்டி
தெறிக்கும் வலி
பழம்புண் ஆறா
அனைத்துக்கும் வெயில் வேண்டும்.

No comments:

Post a Comment