Wednesday, April 28, 2010


ஓவியப் பட்சி

சொண்டு வெடித்து துடிக்கிறது
மன நீர்க்கோப்பைக்குள்
கால் நூற்றாண்டுக் கனவுலகின்
கருவுருவை
இறக்கிவைக்க முடியாதா
நிறைமாத கர்ப்பிணி நான்
பிரயத்தனம் திரட்டி
வியர்வையுடன் வர்ணம் சிந்த
பன்னீர் குடம் உடைத்து
ரத்தத்தில் கலந்த்திட்டு
தூரிகை தொட்டெடுத்து
விரல் வழியால் பிரசவிக்க
தலை நீட்டி லாவகமாய்
முக்கித்தக்கி வெளியாகி
மூச்சின்றிப் படுத்திட்டு
தொப்புள் கொடியறுத்து,
நீர் தெளித்து, முகம் துடைத்து
ஓய்வளித்தேன்
ஆகா...
உயிர்வரைந்த ஓவியமே
உயிர்கொண்டு சிலிப்பிற்று
ஒதுங்கி நின்று இரசித்திருந்தேன்
குறுகுறுத்த பார்வையாலே
எனைக் கண்டு சிரித்திட்டு
மழை வந்தால் நனையாதா
வெயில் என்றால் வியர்க்காதா
வரைபடத்தை விரித்து வைத்து
கூனியில் கயிரிழுத்து
கூடொன்று வரையலானேன்
கூடு முடியுமுன்
என் குருவி பறந்திட்டு

No comments:

Post a Comment